தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓருரு இடங்களில் 39 முதல் 41° செல்சியஸ் வரை இருக்கக்கூடாது. உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 முதல் 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பதிகளில் 34″ முதல் 37° செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
அடுத்த வந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகளில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில்
அசௌகரியம் ஏற்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.