spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தென்காசியில் கனமழையால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன – மாவட்ட ஆட்சியர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஏப்-30 ஆம் தேதி பெய்த கனமழையால் கடையநல்லூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது., மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 37-தென்காசி (தனி) மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமம், யு.எஸ்.பி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மத்திய ஆயுத காவல் படை உள்ளடக்கிய மூன்றடுக்குப் பாதுகாப்புடன் கூடிய முத்திரையிடப்பட்ட பாதுகாப்பு அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. கல்லூரி வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30ம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. கல்லூரி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயலிழந்துள்ளது.

உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் செயலிழந்த கேமிராக்கள் சரி செய்யப்பட்டு மாலை 6.30 மணியளவில் கேமிராக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Video thumbnail
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி
01:50
Video thumbnail
ஆந்திரா: ஸ்ரீ வெல்லா அருகே ஆம்னி பேருந்து தீ பற்றி 3 பேர் உயிரிழப்பு
00:44
Video thumbnail
பாஜக தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
00:51
Video thumbnail
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
00:36
Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img