சென்னையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனையை நடத்திய வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள். பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு உத்திகளை கற்று கொடுத்த தீயணைப்பு துறையினர்.
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், கோட்டாட்சியர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல் உதவி ஆணையர் கனகராஜ், தீயணைப்பு துறை அதிகாரி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, முன்பக்கம் மற்றும் பின்பக்க அதிநவீன கேமராக்கள், முதலுதவி பெட்டிகள், அவசர காலத்தில் வெளியேறும் வழி, படிகட்டுகளின் தரம், வேக கட்டுப்பாட்டு கருவி உட்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது கண்டறியபட்ட குறைகளை அதன் பள்ளி நிர்வாகம் சீர் செய்து மீண்டும் மறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முன்னதாக திடீரென வாகனங்களில் தீப்பிடித்துக் கொண்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்ற செய்முறை விளக்கமும் தீயணைப்புத்துறை சார்பில் செய்து காண்பிக்கப்பட்டது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…