ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் களம் காணும் அன்பு சகோதரர் – கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் @keprakashdmk உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு மொடக்குறிச்சியில் இன்று பரப்புரை செய்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – புதுமைப்பெண் திட்டம் – மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என மகளிர் போற்றும் அரசாக நம் திராவிட மாடல் அரசு திகழுகிறது. அதே நேரம், மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மகளிர் பாதுகாப்பையும் – மாண்பையும் பாசிச கூட்டம் சிதைத்து வருகிறது. இவற்றை எடுத்துச் சொல்லி, பிரகாஷ் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img