spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களை மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தராததால் தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு.

தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலை கிராம மக்கள்.

வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு இதுவரையில் சாலை வசதி இல்லை.

கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறி ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட 10 மலை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு

இந்த நிலையில் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் தவித்து வருவது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்ததோடு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊத்துக்காட்டில் உள்ள 14 வது வாக்குச்சாவடிக்கு எப்பொழுதும் சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் அந்த மலை கிராம மக்கள் சாலை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை குதிரைகளில் கொண்டு செல்வதற்கு வழங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/tamilnadu-weather-report-6/1319

இதனால் வாக்குச்சாவடியின் 14- நம்பர் வாக்கு சாவடிக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தும் பகுதியிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img