spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தல் நடைபெறுவதால் சி.ஏ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மக்களவை தேர்தல் நடைபெறுவதால் சி.ஏ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 2-ம் தேதி தொடங்கவிருக்கும் பட்டயக் கணக்கியல் (சிஏ) தேர்வுகளை ஒத்தி வைக்க வலியுறுத்தி, சிஏ மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இன்று ஏப்ரல் 29 இல், இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மனுவில், மக்களவைத் தேர்தலில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வுகளை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கல்விக் கடமைகள் தொடர்பான நாடு தழுவிய விவாதங்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் கால இடைவெளியில் சி.ஏ. தேர்வுகள் நடைபெறுவது, இந்திய அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாகும். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கு (ICAI) மாணவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் இது குறித்து இடைவிடாத அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். இதேபோன்ற மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து இருந்த போதிலும் 4,46,000 க்கும் மேற்பட்ட சிஏ மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதி கொண்டு தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கல்விச் சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு சிஏ படிக்கும் மாணவர்களுக்கான பரப்பை வடிவமைக்கும் கல்வி நோக்கங்களுக்கும், ஜனநாயகப் பொறுப்புகளுக்கும் இடையிலான நுட்பமான சமநிலையை உருவாக்கும். நாட்டின் தேர்தல் நடைமுறை நோக்கில் கல்வி மற்றும் ஜனநாயகத்தின் நலன்களை சமநிலைப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
"எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்" -டிடிவி தினகரன்
01:43
Video thumbnail
கூட்டணி பா.ஜ.கவுடனா? த.வெ.கவுடனா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்
00:28
Video thumbnail
மீனவப் பெண்களுடன் கௌதமி | காசிமேடு பிரச்சாரம் பேசுபொருள் | MGR | ADMK | Gautami | Election 2026
01:04
Video thumbnail
சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சுக்கு நடிகர் விஷால் கண்டனம் #Vishal #CVShanmugam
02:52
Video thumbnail
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
01:47
Video thumbnail
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
00:45
Video thumbnail
"பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது."-ரஞ்சனா நாச்சியார்
01:39
Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img