ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாக்குவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்புக்கான ஆலையை திறக்கயிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு பணி தொடங்க இருக்கிறது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

இது தொடர்பான முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது.

இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

அமெரிக்காவின் டெட்ராய்டு நகர் போல ராணிப்பேட்டையை சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் போன்ற உயர்ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல்.ஆர். கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அதேபோல தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜெ.எல்.ஆர். கார்கள் பிரிட்டானிலிருந்து இறக்குமதியாகின்றன.

ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/cm-mk-stalin-tweet-3/1313

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மூலம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ராணிபேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:21
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img