spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாக்குவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்புக்கான ஆலையை திறக்கயிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு பணி தொடங்க இருக்கிறது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

இது தொடர்பான முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது.

இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

அமெரிக்காவின் டெட்ராய்டு நகர் போல ராணிப்பேட்டையை சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் போன்ற உயர்ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல்.ஆர். கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அதேபோல தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜெ.எல்.ஆர். கார்கள் பிரிட்டானிலிருந்து இறக்குமதியாகின்றன.

ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/cm-mk-stalin-tweet-3/1313

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மூலம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ராணிபேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.

Video thumbnail
விஜய் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
02:17
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
Video thumbnail
"டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சி" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு | Trichy Siva
16:53
Video thumbnail
"தமிழ்நாடு நிதியை புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாடு புறக்கணிக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
15:58
Video thumbnail
கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img