கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டதாக கூறி வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது எம்எல்ஏ விடுதி அறையிலும், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையின் சாவியை பெற்று அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்த்து மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…