போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் டிஜே ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். அத்துடன் படக்குழுவினருக்கு அசைவ விருந்து படைத்து மகிழ்ந்துள்ளனர். அந்த வகையில் டி.ஜே.ஞானவேல் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் படக்குழுவினருக்கு உணவு பரிமாறும் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் அந்த விழாவில் டிஜே ஞானவேல், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை என்றால் வேட்டையன் படம் சாத்தியம் கிடையாது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்கு பிறகு கதையை சார்ந்த ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படைப்பு சுதந்திரத்துடன் வெளியாவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றி. வேட்டையன் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது;” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…