கென்யா தலைநகர் நைரோபியை புரட்டி போட்டுள்ள வெள்ளத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. இதன் எதிரொளியாக கென்யாவிலும் கடந்த மார்ச் மாத பிற்பகுதியிலிருந்து கனமழை பெய்து வருகின்றது. கடந்த வாரத்தில் கனமழை அதிதீவிரமாகி நைரோபி உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தலைநகர் நைரோபியில் பாயும் நைரோபி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தன. இதில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் இறந்துவிட்டனர்.
ஒரு மாதமாக தொடரும் கனமழை இயற்கை பேரிடர் ஆக மாறி உள்ளது. மச்சகோஸ் கவுண்டியில் உள்ள அத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தது. அங்கு சிக்கிக் கொண்டு தவித்த 300 பேரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு உள்ளனர்.
ஒரு மாதமாக தொடரும் கனமழையில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்து விட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…