திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக 25 செ.மீ அளவிற்கு கன மழை பெய்தது.இந்தநிலையில் ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் ஆவடி நோக்கி செல்லக்கூடிய தண்டவாளம் அருகில் மாடு கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த இரயில்வே பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது மிகவும் குறுகிய கால்வாயின் உள்ளே பெரிய பசுமாடு சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த இரயில்வே பணியாளர்கள் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வழியே வந்த ரெயில்களை நிறுத்தினர்.பின்னர் குறுகிய கால்வாயில் உள்ளே சிக்கி இருந்த பசுமாட்டை மீட்க போராடினர்.
எனினும் மீட்பது கடினமான நிலையில் கால்வாயை அகலப்படுத்தி மாட்டின் கொம்பில் கயிற்றை கட்டி போராடி மீட்டனர்.இதனை தொடர்ந்து அந்த மாடு துள்ளி குதித்து ஓடியது. இதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் அந்த தண்டவாளத்தில் கடந்து சென்றது. கால்வாயில் சிக்கி கொண்ட மாட்டை போராடி மீட்ட சம்பவம் நெகழ்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுகிய கால்வாயில் சிக்கி கொண்டு உயிருடன் போராடிய மாட்டை, உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு ரயில்வே பணியாளர்கள் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…