spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தலை நடத்தி வருகிறது. மொத்த ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்து இருந்தது. அதாவது, ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 26ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத், கா்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img