spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“ஆம் ஆத்மியை அழிக்க அமலாக்கத்துறை முயற்சி”- நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஆம் ஆத்மியை அழிக்க அமலாக்கத்துறை முயற்சி செய்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறையின் காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, “ஆம் ஆத்மி கட்சியை அழித்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது. குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இன்றி நான் கைது செய்யப்பட்டுள்ளேன்; அமலாக்கத்துறை தன்னை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளட்டும்; அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img