பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது
பல்வேறு வகையான பிரிவு ஆவணங்களை பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கிறது. கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக குறிப்பிட்ட சில முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து   – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

ஆவணங்களின் அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என இருந்ததை ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என இருந்ததை ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என இருந்ததை ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என இருந்ததை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதுவரை குறைந்தபட்ச விலையில் இருந்த ரூ.20 பத்திரம், அது தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது ரூ.200 வரை அதிகரித்துள்ளது. தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் என்பதை வாங்க முடியாது. 20 ரூபாய் பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு பிரிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 24 வகைகளுக்கான கட்டணம் அதிகரித்ததன் மூலம் 10% முதல் 33% முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் கட்டண உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் அரசு திரும்ப பெறாமல் இருக்கிறது என்றும் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் : 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img