spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேலூர் மத்திய சிறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைகள் செய்வதற்காக, சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் ஆகியோர் சிவகுமாரை சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

விசாரணையில் கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியானதால், அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாள அப்துல்ரகுமான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

Video thumbnail
"அமைச்சராக நீடிக்க தகுதி இல்லாத நபர் நிர்மல் குமார்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
00:27
Video thumbnail
டெல்லியில் திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி
00:23
Video thumbnail
"பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னார்; எந்த பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னாரா?" - ஆதவ் அர்ஜுனா
01:47
Video thumbnail
சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
01:51
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய் | இன்னும் தேர்தல் பிரசார பாணியில் பேச்சு | CM Vijay | TVK | DMK
12:35
Video thumbnail
பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் அம்பேத்கர் கனவு நிறைவேறியுள்ளது..
02:24
Video thumbnail
"ஆமாங்க.. தெரியாது தான்.." எங்களுக்கு ஊழல் பண்ண தெரியாது, மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது..- முதல்வர்
02:35
Video thumbnail
திமுக ஆட்சியின் 25 முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றதால் 2.3 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு..
02:36
Video thumbnail
ஆளுநர் உரையில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி
01:36
Video thumbnail
தண்ணீர் பாட்டில் விவாதம்.. OPS சொன்ன வார்த்தை.. சிரிப்பில் குலுங்கிய பேரவை..
02:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img