சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்திருக்கிறார். இன்று காலை சக மாணவர்கள் 6 பேருடன் மெரினாவில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவியரசன் மாயமாகியுள்ளார்.
குளித்துக் கொண்டிருந்த சக நண்பர்கள் அங்கும் இங்கும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து கடலோர காவல் படையினரின் உதவியோடு மாயமான கவியரசனை தேடிய நிலையில் கவியரசின் சடலம் கரை ஒதுங்கியது. மெரினா போலீசார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…