spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு கல்லூரி மாணவி படுகாயம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு… கல்லூரி மாணவி படுகாயம்! நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடிரென இருசக்கர வாகனத்தின் மீது பாய்ந்ததில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தார். நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சுவாதிகா. இவர் இன்று காலை 9 மணி அளவில் கல்லூரிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தியாகராஜ நகர் 2-வது நடுத்தெருவின் வழியாக சென்றபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த மாடுகளில் ஒன்று, திடீரென மாணவி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மாணவி சுவாதிகா பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தியாகராஜ நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் இது போன்று அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை மீட்டு அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தியாகராஜர் பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img