spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு நேரில் சென்று ஆய்வு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு நேரில் சென்று ஆய்வு.திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு சரக்கு ரயிலின் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகா சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் இடை இடையே நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வரும் – அப்டேட் செய்த அனிருத்!

இந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் காரணமா? என உயர்மட்டக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் மெமு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூளூர்பேட்டை – நெல்லூர் மெமு ரயில், விஜயவாடா – சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img