spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தொடா் விடுமுறையால் விமான டிக்கெட்டின் விலை உயர்வு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தொடா் விடுமுறையால்  விமான டிக்கெட்டின்  விலை  உயர்வு.

தமிழ்நாட்டில் பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு விமான டிக்கெட் கட்டணங்கள் மூன்று மடங்குக்கு மேல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கும், இல்லையேல் விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்கும், சுற்றுலா தளங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். கடைசி ரயில், நேரத்தில் ரயில் மற்றும் பேருந்துகளில் இடமில்லாதவர்களும் 3 நாட்கள் விடுமுறையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து 2 நாட்களை பயண நாட்களாக கழிக்க மனம் இல்லாதவர்கள் பறந்து செல்லும் நோக்கத்துடன் விமானங்களில் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும், விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து விமான டிக்கெட் கட்டணங்களும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.

இன்றைய கட்டணம் ரூ.12,026 முதல் ரூ. 18,626 வரை

சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.5,006.
இன்று ரூ.11, 736 முதல் ரூ.13,626 வரை.

சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382.
இன்று ரூ.5,456 முதல் ரூ.6,907 வரை.

சென்னை- கோவை கட்டணம் ரூ. 3,290.
இன்று ரூ.10,611 முதல் ரூ.10,996 வரை.

சென்னை- சேலம் கட்டணம் ரூ. 3,317.
இன்று கட்டணம் ரூ.10,792.

இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்கள் முன்பதிவு செய்வதால் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் வேகமாக நிரம்பி ஓரிரு இருக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. அதிலும் இன்றைய தினம் காலையில் செல்லும் விமானங்களை விட, மாலை மற்றும் இரவு நேரங்களில் செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் இல்லையென்றால் சுற்றுலா தளங்களில் பொழுதை கழிக்கும் ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களில் பயணம் செய்கின்றனர் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img