கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், மாநில கல்லூரியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவர் சுந்தர் உயிரிழந்தார்.
மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 6 பேரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சென்னையில் முக்கிய ரயில் வழித்தடங்கள், பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…