அம்பத்தூரில் மீண்டும் கஞ்சா விற்ற நபர் கைது
ஆந்திரா போலீசாரால் கஞ்சா கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட சென்னை வாலிபர் அம்பத்தூரில் கஞ்சா விற்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அலமேலு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் பண்டல், பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தனுஷ் (25) என்பதும், ஆந்திர மாநிலம் அனக்கப்பள்ளி பகுதியில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் அம்பத்தூருக்கு வந்து வடமாநில வாலிபர்களிடம் விற்பனையில் ஈடுபடுவது வழக்கம் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 35 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது அம்பத்தூர் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடதக்கது.