ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்
சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது உடனேயே அலாரம் பீப் அடித்ததை கேபின் குழுவினர் ஒருவர் கவனித்துள்ளார்.
கழிவறையிலிருந்து அவர் வெளிவந்த பிறகு கழிவறைக்குள் புகை சாம்பல் இருந்ததை கண்டு பின்னர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கேபின் குழுவினர் எச்சரித்தும் மீறி நடந்து கொண்டாதனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து) கீழ் சஹார் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.