திருப்பூர் மாநகராட்சி நல்லூரில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அருகே உள்ள நல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் மைதிலி. இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் நோட்டுகளில் ரசாயனப் பவுடர் தடவி கொடுத்து அனுப்பினர். பின்னர் இன்று நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து மைதிலி பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக மைதிலையை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…