spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி

ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில், கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் 1.36 கோடி ரூபாயை இழந்த ஐ.டி.ஊழியர்.

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைது

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (41) ஐ.டி., ஊழியர். இவர், முகநூலில் டிரேடிங் எப்படி செய்வது என்பது தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 11 ஆம் தேதி, இரு மொபைல் எண்ணில் இருந்து, ஜோஷிதா, வர்ஷினி என்ற பெயர் கொண்ட நபரிடம் இருந்து, அவரது வாட்சப் எண்ணிற்கு ஆன்லைன் டிரேடிங் குறித்து லிங்க் ஒன்று வந்துள்ளது.

கார்த்திக் அந்த லிங்கை திறந்து, டிரேடிங் தொடர்பான விவரங்களை பார்த்த பின், தனது வங்கி கணக்கு வாயிலாக லாகின் செய்ய அனுமதி பெற்று லாகின் செய்துள்ளார்.

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைது

தொடர்ந்து, 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதிலிருந்து 36,000 கமிஷன் தொகையை திரும்ப எடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, 10 சதவீதம் கமிஷன் போக, 300 சதவீதம் லாபம் கிடைக்கும் ‘இன்ட்ரா டே ; பிளாக் டிரேட் மற்றும் ஐ.பி.ஓ., ஆகிய டிரேடிங்கில் இணைய விரும்புவதாக, மர்ம நபர்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கமிஷன் தொகையான 27 லட்சம் ரூபாயை செலுத்தாவிட்டால், வங்கி கணக்கு முடங்கிவிடும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதன்படி, 27.96 லட்சம் ரூபாய், வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.

மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் 1.36 கோடி ரூபாயை செலுத்தி பணத்தை இழந்துள்ளார்.

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைது

இது குறித்து விசாரித்த மத்திய சைபர் கிரைம் போலீசார், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(30) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கை பயன்படுத்தி தேவையில்லாமல் பணத்தை இழக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
Video thumbnail
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்" - பியூஷ் கோயல்
01:37
Video thumbnail
"ரெண்டே பேருக்கு தான் போட்டியே ஒன்னு விஜய் இன்னொன்னு நான்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
00:58
Video thumbnail
"தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடன் பேசவில்லை " - டிடிவி தினகரன் பேட்டி
02:11
Video thumbnail
கோரிக்கை வைத்த குட்டி ரசிகை: நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தம்பதி
00:39
Video thumbnail
"சேகர்பாபுவிற்கு எல்லாம் பதில் கொடுக்க நேரமில்லை" -ஆதவ் அர்ஜுனா
01:51
Video thumbnail
TVK கட்சியின் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
00:58
Video thumbnail
மும்பையில் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
00:43
Video thumbnail
"எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்" -டிடிவி தினகரன்
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img