திருப்பதி கோயிலில் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முப்பது மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் இலவச நேரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோயிலுக்கு இனிமேல் வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள தேவஸ்தான இலவச லாக்கரில் உடைமைகளை வைத்து விட்டு ஆங்காங்கே தங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இனிமேல் வரும் பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பிறகு தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவர் எனவும் மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…