spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் உயிரிழப்பு குரல் கொடுத்த ரத்னகுமார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் உயிரிழப்பு குரல் கொடுத்த ரத்னகுமார்!நேற்று (அக்டோபர் 6) இந்திய விமானப்படையின் 92 வது கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வகையான விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விமான சாகசங்களை காண மக்கள் பலரும் படையெடுத்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த வகையில் உலகத்திலேயே அதிக மக்கள் பார்த்து ரசித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் தான் அந்த துயர சம்பவமும் நடந்தது. அதாவது மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிக்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்கு காரணம் என அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “எளிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடம் மெரினா. அங்கு காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் வார இறுதியில் ஏர்ஷோ பார்க்க கூடும் கூட்டத்தின் அளவை சரியாக கணித்திருக்க வேண்டும். இன்னமும் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்க்கும் 5 அப்பாவி மக்களின் உயிர்கள் போயிருக்கின்றன. கூட்டத்திற்கு பயந்தே நான் இந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இது ஆரோக்கியமான உணர்வும் அல்ல. கேலிக்கைக்கு கூட்டம் கூடவே பயம் ஏற்பட்டால். நாளை ஞாயத்திற்கு எவ்வாறு கூடுவார்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img