spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு துணை முதலமைச்சர் ஆறுதல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு துணை முதலமைச்சர் ஆறுதல்
திருவள்ளுர் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானது. ரயில்கள் மோதிக்கண்ட வேகத்தில் சில ஏசி பெட்டிகள் தடம்புரண்டு தீப்பிடித்து எரிந்தன.

ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், மற்றும் கவரைப்பேட்டை பகுதிபொதுக்கள் சம்பவ இடத்திக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய 1300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களை அமைச்சர் ச.மு.நாசர். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு அமைச்சர் நாசர் உணவுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, அவர்கள் சிறப்பு பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சொந்த ஊர்செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பயணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து
ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

TNPSC அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பணியாளர் தேர்வு அட்டவணை வெளியீடு…!

மீட்கப்பட்ட பயணிகளை பிரத்யேக வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயணம் செய்ய முடியாதவர்களை அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைத்து தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெ ரிவித்தார்.

Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
Video thumbnail
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்" - பியூஷ் கோயல்
01:37
Video thumbnail
"ரெண்டே பேருக்கு தான் போட்டியே ஒன்னு விஜய் இன்னொன்னு நான்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
00:58
Video thumbnail
"தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடன் பேசவில்லை " - டிடிவி தினகரன் பேட்டி
02:11
Video thumbnail
கோரிக்கை வைத்த குட்டி ரசிகை: நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தம்பதி
00:39
Video thumbnail
"சேகர்பாபுவிற்கு எல்லாம் பதில் கொடுக்க நேரமில்லை" -ஆதவ் அர்ஜுனா
01:51
Video thumbnail
TVK கட்சியின் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
00:58
Video thumbnail
மும்பையில் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img