spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது
பல்வேறு வகையான பிரிவு ஆவணங்களை பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கிறது. கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக குறிப்பிட்ட சில முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து   – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

ஆவணங்களின் அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என இருந்ததை ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என இருந்ததை ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என இருந்ததை ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என இருந்ததை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதுவரை குறைந்தபட்ச விலையில் இருந்த ரூ.20 பத்திரம், அது தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது ரூ.200 வரை அதிகரித்துள்ளது. தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் என்பதை வாங்க முடியாது. 20 ரூபாய் பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு பிரிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 24 வகைகளுக்கான கட்டணம் அதிகரித்ததன் மூலம் 10% முதல் 33% முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் கட்டண உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் அரசு திரும்ப பெறாமல் இருக்கிறது என்றும் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் : 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img