அரசியல்

“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

இந்தியா முழுமைக்குமான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தனது வாழ்க்கையில் அலட்சியம் என்றும் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சமூக நீதிக்கான கருத்தரங்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் தீவிரமான அரசியல்வாதி கிடையாது என்றும் பாஜகவினர் விமர்சிப்பதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளுக்காக பேசுவது தீவிர அரசியல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

 

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விராட் கோலி உடன் பேசுவது தான் தீவிர அரசியலா என்றும் மோடியை மறைமுகமாக ராகுல் சாடினார்.

70 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ள போகும் முக்கியமான நடவடிக்கையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கப் போகிறது என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசியலுக்காக நடத்தவில்லை அதுதான் தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

அனைத்து இடங்களிலும் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறிக் கொண்டிருந்த மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தொடங்கியவுடன் ஜாதிகளே இல்லை எனக் கூறிய இரட்டை வேடம் போடுவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

பெரும் பணக்காரர்களுக்கு மோடி அளித்த 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியை 90 சதவீத இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பிரித்து பயன்படுத்துவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் லட்சியம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

https://www.mugavari.in/news/politics/lok-sabha-elections-phase-2-voting-underway/1878

16 லட்சம் கோடியை மக்களுக்காக பயன்படுத்தினால் சமையல் எரிவாயு சிலிண்டரை 400 ரூபாய்க்கு வழங்க முடியும் என்பது உள்ளிட்ட நன்மைகளையும் ராகுல் பட்டியலிட்டு உள்ளார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி