இலங்கை சிறையிலிருந்த 17 மீனவர்களை மீட்டு ; சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடவடிக்கை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, 17 ராமேஸ்வரம் மீனவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த, வாகனங்களில், சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்.

ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் கைது செய்தனர்.அதோடு படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இலங்கை சிறையிலிருந்த 17 மீனவர்களை மீட்டு ; சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடவடிக்கை

அவா் அடுத்து இலங்கையில் உள்ள, இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள், 17 பேரையும் தங்கள் பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதன்பின்பு 17 மீனவர்களுக்கும், பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அதோடு மீனவர்களை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்புவதற்காக, இந்திய தூதரக அதிகாரிகள், விமான டிக்கெட் களும் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 17 ராமேஸ்வரம் மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 17 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம், அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img