கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை, திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் 6-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 7-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சிறப்பு ரயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம்,செய்துங்கநல்லூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்டரலை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…