செய்திகள்

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வை குறித்து – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை.

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது
பல்வேறு வகையான பிரிவு ஆவணங்களை பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கிறது. கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக குறிப்பிட்ட சில முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவணங்களின் அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என இருந்ததை ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என இருந்ததை ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என இருந்ததை ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என இருந்ததை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதுவரை குறைந்தபட்ச விலையில் இருந்த ரூ.20 பத்திரம், அது தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது ரூ.200 வரை அதிகரித்துள்ளது. தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் என்பதை வாங்க முடியாது. 20 ரூபாய் பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு பிரிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 24 வகைகளுக்கான கட்டணம் அதிகரித்ததன் மூலம் 10% முதல் 33% முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் கட்டண உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் அரசு திரும்ப பெறாமல் இருக்கிறது என்றும் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி