spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரூ.28 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரூ.28 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

கும்பகோணத்தில் 600 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் மீது சென்னையில் உள்ள தங்க நகை கடையில் தங்கம் வாங்கிக் கொண்டு 28 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் அளித்த புகாரினைத் தொடர்ந்து சுவாமிநாதன் கைது. எம்.ஆர்.கணேஷ் தலைமறைவு ஆனார்.

ரூ.28 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது

கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் கும்பகோணத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி கொண்டு ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்துகிறோம் என்ற பெயரில் பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடு பெற்று 600கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.

ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் முதலீடு செய்த நபர்கள் வட்டியும் வரவில்லை முதலும் கிடைக்கவில்லை என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இவர்கள் பிணையில் உள்ளனர்.

ரூ.28 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது

இதற்கிடையில் இவர்களின் மீது சென்னையை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் தங்களிடம் நகைகளை வாங்கிக்கொண்டு 28 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணம் தராமல் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட தங்க நகை நிறுவனம் சென்னை காவல் துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று சுவாமி நாதனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கணேசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

600 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் மீது சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கே பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

https://www.mugavari.in/news/politics/defamation-case-filed-against-edappadi-palanisamy/1268

இவர்களிடத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் என்பதால் காவல்துறையில் அவர்கள் புகார் அளிக்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்தது இவர்கள் மீதான மோசடி வழக்கு. திடீர் திருப்பமாக தற்போது சென்னை நகைக்கடையில் தங்க காசுகளை வாங்கிக் கொண்டு 28 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img