எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

உண்மைக்கு புறம்பான தகவல்களை தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவை சேர்ந்த மத்திய சென்னை வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது தன் மீது உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசி இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

எழும்பூர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்பது பொய்யான தகவல் என்று தெரிந்தே தன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

எனவே, இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருப்பதாகவும், இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொகுதி நிதியில் ரூபாய் 17 கோடியில் 17 லட்சம் ரூபாய் தான் மீதம் இருப்பதாகவும், தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்கே தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் என்று திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார்.உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-spcial-bus/1252

செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதே போலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்.டி.ஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது என்றார்.

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img