ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை – கெத்து காட்டிய தாய்மாமன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

தமிழகத்தில் தாய்மாமன் சீர்வரிசை  கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும்  முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய் கூட பிறந்த தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை ஆவடி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன்- அபிராமி ஆகியோரின் மகள் ஹர்ஷிகாவின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. அந்த பூப்புனித நீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவிற்கு வருபவர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் அபிலேஷின் சீர் வரிசை.  அபிலேஷின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மாட்டுவண்டிகளிலும், பெண்கள் கையில் தட்டுகள் ஏந்தியும் சீர் வரிசைகளை கொண்டு சென்றார்.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ஊர்வலமாக விழா மேடைக்கு சீர் வரிசைகளை கொண்டு சென்றது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மேலும் நகைகள், புத்தாடைகள், மா,பலா,வாழை, மாதுளை, திராட்சை, உள்ளிட்ட பழவகைகளும், அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 100 வகைகளில் சீர் கொண்டு வந்தனர்.

முடிந்தவரை தங்கள் கைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாட்டு வண்டியிலும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க  தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த  கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளை விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தது தாய்மாமனின் கெத்தே தனிதான் என்று பேசும் அளவிற்கு இருந்தது.

இந்த நிகழ்ச்சி அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Video thumbnail
தினமலர் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையா? கடுப்பான ரங்கராஜ் பாண்டே | ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன? | RSS | BJP
13:02
Video thumbnail
“சினிமாவில் மின்னும் எல்லா நட்சத்திரமும் உதயசூரியன் ஆக முடியாது” – அமைச்சர் கோவி.செழியன்
02:05
Video thumbnail
அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
01:00
Video thumbnail
SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டனம் அறிக்கையை அறிவித்தது தவெக தான் | RajMohan | TVK
04:56
Video thumbnail
பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது என விஜய்யை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு
00:44
Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img