ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை – கெத்து காட்டிய தாய்மாமன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

தமிழகத்தில் தாய்மாமன் சீர்வரிசை  கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும்  முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய் கூட பிறந்த தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை ஆவடி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன்- அபிராமி ஆகியோரின் மகள் ஹர்ஷிகாவின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. அந்த பூப்புனித நீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவிற்கு வருபவர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் அபிலேஷின் சீர் வரிசை.  அபிலேஷின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மாட்டுவண்டிகளிலும், பெண்கள் கையில் தட்டுகள் ஏந்தியும் சீர் வரிசைகளை கொண்டு சென்றார்.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ஊர்வலமாக விழா மேடைக்கு சீர் வரிசைகளை கொண்டு சென்றது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மேலும் நகைகள், புத்தாடைகள், மா,பலா,வாழை, மாதுளை, திராட்சை, உள்ளிட்ட பழவகைகளும், அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 100 வகைகளில் சீர் கொண்டு வந்தனர்.

முடிந்தவரை தங்கள் கைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாட்டு வண்டியிலும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க  தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த  கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது.

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை - கெத்து காட்டிய தாய்மாமன்

தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளை விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தது தாய்மாமனின் கெத்தே தனிதான் என்று பேசும் அளவிற்கு இருந்தது.

இந்த நிகழ்ச்சி அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
Video thumbnail
அடுக்குகளின் இலக்க எண்ணிக்கையை கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img