உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுகேரளாவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad)  சேர்ந்தவர் சபித் நாசர் (30).  சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தியவர்களின் உறுப்புகளை பெறுவதற்காக, டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இந்த மோசடியின் ஒரு பகுதியாக எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அவர் ஹைதராபாத்தில் இருந்து ஈரானுக்கு இரண்டு நபர்களை அனுப்பி உள்ளதாகவும்,  அவர்களின் சிறுநீரகங்களை பெற்றதாகவும் தெரியவருகிறது.

சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐதராபாத், பெங்களுரு ஆகிய பகுதிகளில் இருந்து பொருளாதார்தில் பின் தங்கியவர்களை கிட்னி தானம் என்று கூறி ஈரான் நாட்டுக்கு அனுப்பப்பட்டது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுஇந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட நபர்கள் ஈரான் நாட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்னி எடுக்கப்படுகிறது. அதன் பின் எடுக்கப்பட்ட கிட்னி பொருந்தும் உரிய நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு கிட்னி பொருத்தப்படுகிறது.

ஒரு கிட்னி ரூ.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. கிட்னி எடுத்த பிறகு இருபது நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு  அனுப்பி வைப்பதாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

சபித் டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2019 முதல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். முதன் முதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக்  நன்பர் ஒருவர் உதவியுடன் ஜூலை 2019 -ல் இலங்கைக்கு சென்று ரூ 5 லட்சத்திற்கு தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்யதுள்ளார் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுதற்போது அவர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக கேரளா வந்துள்ளார். அவரை புலனாய்வுப் பணியகத்தின் கண்காணிப்பின் உதவியுடன் , கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யபட்டுள்ளார்.

திங்கட்கிழமை (மே 20), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை (மே 21) காவலில் எடுத்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img