தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,040-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலையானது 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img