spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருச்சி சர்வதேச விமான நிலைய 2வது முனையம் திறப்பு – பயணிகள் மகிழ்ச்சி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

திருச்சி சர்வதேச விமான நிலைய 2வது முனையம் திறப்பு - பயணிகள் மகிழ்ச்சிவிமான நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தது.அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய முனையத்தில் விமான போக்குவரத்து இன்று தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து(வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.

புதிய முனையத்தில் ஆண்டுக்கு 45,00,000 பயணிகளை கையாள முடியும் அதே நேரத்தில்,10 விமானங்களில் வந்து செல்லும் 3000 பயணிகளை கையாளலாம். ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தர இறங்கவும் புறப்பட்டும் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு நாளில் குறைந்த பட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைகள் 750 கார்கள், 250 வாடகை கார்கள், 10 பேருந்துகள் நிறுத்த வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

60 வருகை கவுண்டர்கள், 44 புறம்பாடு கவுண்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுண்டர்களுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
டார்ச்சர் - பா.ஜ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி; ஆடியோ வைரல்
02:15
Video thumbnail
பெண்கள் என்றாலே அழகுதான்; ஆனால், அறிவுதான் உண்மையான அழகு
01:28
Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img