தமிழ்நாடு

திருச்சி சர்வதேச விமான நிலைய 2வது முனையம் திறப்பு – பயணிகள் மகிழ்ச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

விமான நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தது.அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய முனையத்தில் விமான போக்குவரத்து இன்று தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து(வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.

புதிய முனையத்தில் ஆண்டுக்கு 45,00,000 பயணிகளை கையாள முடியும் அதே நேரத்தில்,10 விமானங்களில் வந்து செல்லும் 3000 பயணிகளை கையாளலாம். ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தர இறங்கவும் புறப்பட்டும் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு நாளில் குறைந்த பட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைகள் 750 கார்கள், 250 வாடகை கார்கள், 10 பேருந்துகள் நிறுத்த வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

60 வருகை கவுண்டர்கள், 44 புறம்பாடு கவுண்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுண்டர்களுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி