தமிழ்நாடு

ஊடக துறையில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராட வேண்டி உள்ளது

ஊடக துறையில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராட வேண்டி உள்ளது

ஊடக துறையில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு இன்றளவும் போராட வேண்டி உள்ளதாக மூத்த பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “இதழியலில் பெண்கள்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த பெண் பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன், சுகிதா சாரங்கராஜ், ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய கவிதா முரளிதரன், இதழியல் (Journalism ) துறையில் பெண்கள் தங்களுடைய இடத்திற்கு தொடர்ந்து போராடும் நிலை உள்ளது என்றார். ஆங்கில ஊடகம் மற்றும் தமிழ் ஊடகங்கள் என அனைத்திலும் இது உள்ளது. இன்று பாஜக ஆதரவு நிலையில் பல ஊடகங்களில் உள்ளது. இதில் பல செய்தியாளர்கள் விருப்பம் இல்லாமல் தங்களின் சூழ்நிலை காரணமாக பணியாற்றுகின்றனர். தற்போது 70 சதவீதம் ஊடகங்களை கார்பரேட் நிறுவனங்கள் நிர்வாகிக்கிறது. மோடி மீண்டும் வந்தால் இது மேலும் அதிகரிக்கும். இன்றும் தமிழ் ஊடகங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் உள்ளனர்.

அதன் பின்னர் பேசிய சுகிதா சாரங்கராஜ், ஊடக துறையில் பெண்கள் உரிமைக்காக போராட வேண்டிய தேவை உள்ளது. பெரியார் மண்ணில் பெண்ணுரிமை என்பது பெரிய தோய்வு நிலையில் உள்ளது. முன்னணி ஊடகங்களில் செய்திகளை வழங்குவதில் நெறி தவறி செயல்படுகின்றன. இதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன். ஆணாதிக்கம் என்பது ஊடக துறையில் இன்றும் உள்ளது. நிர்வாகி ஆசிரியர் போன்ற பணிகளுக்கு பெண்களை தேர்வு செய்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் இது உள்ளது. ஒரு பிரச்சனை தீரும் வரையில் ஊடகங்கள் தொடர்ந்து அதனை செல்வது இல்லை. முழுமையான திட்டமிடல் இல்லாமல் செய்திகளை ஊடகங்கள் கொடுக்கிறது. பெண்கள் ஆண்கள் என பிரித்து பார்க்கும் ஊதிய பாகுபாடு அனைத்தும் வருத்தமளிக்கிறது என்றார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெயராணி, ஊடக துறையில் பெண்கள் புறக்கணிப்பு பல காலமாக உள்ளது. தீண்டாமை குறித்து யாரும் பேச கூடாது என்று எல்லோரும் அமைதியாக உள்ளனர். ஏனென்றால் இதை அனைவரும் விரும்புகின்றனர். கட்சிகள் சாதி ரீதியில் தான் பதவிகளை வழங்குகிறது.

https://www.mugavari.in/news/cinema-news/raghava-lawrence-is-in-awe-of-vetrimaarans-story/1630

சாத்தான் குளம் மரணம் உயர் சாதியினருக்கு நடந்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் சிறை மரணம் பல நடக்கிறது. ஆனால் ஊடகங்கள் அங்கு வேறு விதமாக நடந்து கொள்கிறது. இது மாற வேண்டும் என்றார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி