spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முதலமைச்சர் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது – கி.வீரமணி பாராட்டு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு. தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது - கி.வீரமணி பாராட்டு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  நமது ‘திராவிட மாடல்‘ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பெரியார் நூலகம்- அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.முதலமைச்சர் இதனை அறிவிக்கும்போது ‘‘இனிவரும் உலகம்‘‘பற்றி தந்தை பெரியார் தொலைநோக்கோடு சொன்னதையும் சுட்டிக்காட்டியது மிகவும் பொருத்தமானது. சோதனைக் குழாய்க் குழந்தைபற்றி 1938 ஆம் ஆண்டிலேயே கணித்தவர் தந்தை பெரியார். (ஆய்வுக்கவுண்டன்பாளையம் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை – ‘குடிஅரசு‘, (30.1.1938). அதேபோல, 1943 ஆம் ஆண்டு செய்யாறு – திருவத்திபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையி்ல் குறிப்பிட்ட – எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எவை எல்லாம் ஏற்படும், நிகழும்  என்பதை எடுத்துக் கூறியவர் தந்தை பெரியார். அந்த உரையைத் தம் கைப்பட எழுதி ‘திராவிட நாடு‘ இதழில் (21.3.1943, 28.3.1943) வெளியிட்டவர் அறிஞர் அண்ணா.

முதலமைச்சர் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது - கி.வீரமணி பாராட்டு

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் (5.11.2023) நடைபெற்ற தந்தை பெரியார் விழாவில் உரையாற்றிய ‘சந்திராயன்‘ புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், ‘‘எனக்குப் பின்புலமாக இருந்தது தந்தை பெரியாரின் அறிவியல் சிந்தனையே’’ என்று கூறியதும் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும்.எல்லாத் திசைகளிலும் சிந்தித்து, நூலகத்தோடு – அறிவியல் மய்யத்தையும் இணைத்து தந்தை பெரியார் பெயரை நமது முதலமைச்சர் சூட்டியிருப்பதற்கு எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.அடிக்கல் நாட்டியதோடு, திறப்பு விழா தேதியையும் அடிக்கல் நாட்டும் விழாவிலே அறிவித்த ஒரே முதலமைச்சர் நமது  மாண்புமிகு  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது – ஒப்பிட முடியாதது. பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று பாராட்டியுள்ளார்.

Video thumbnail
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி
01:50
Video thumbnail
ஆந்திரா: ஸ்ரீ வெல்லா அருகே ஆம்னி பேருந்து தீ பற்றி 3 பேர் உயிரிழப்பு
00:44
Video thumbnail
பாஜக தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
00:51
Video thumbnail
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
00:36
Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img