வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மர்பெண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பெரும்பாடி அடுத்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (53) தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனை எடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் வடிவேல் ஆகியோர் நேற்று (25-10-2024) இரவு அப்பள்ளியில் படிக்கும் பாஸ்மர் பெண்டா கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், தலைமை ஆசிரியர் உதயகுமார் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் தலைமையாசிரியர் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…