spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொலை – குற்றவாளி கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சிவகங்கையை அருகே  கடந்த 23 ந் தேதி கல்குளத்தில்  கிணற்றில்  13 வயது தனலெட்சுமி இறந்து கிடந்தார். சிறுமி தனலெட்சுமியை கல்குளம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் சிவகங்கை போலீசார் சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொலை – குற்றவாளி கைது

சிவகங்கை அருகே கல்குளத்தில் இரு தினம் முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொடூர கொலை செய்த குற்றவாளி சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது தப்பி ஓட முயன்று உள்ளார் அப்போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு தற்போது அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் ஏற்கனவே போக்சோ வழக்கில் 11ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர், மேலும் இவர் தனது சித்தியை கொலை செய்த வழக்கும் இவர் மீது உள்ளது. இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சதீஷ்குமாரின் மனைவி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல . மதுரை சூர்யா நகரை சேர்ந்த 13 வயதான சிறுமி தனலெட்சுமியின் தாயாரும் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து கடத்தி வந்த  1.24 கிலோ தங்கம் – சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் தனலட்சுமிக்கும் மருத்துவமனையில் வைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ந் தேதி  தனலட்சுமிக்கு அடைக்கலம் கொடுப்பது போல் பழகிய சதீஷ்குமார் அன்றைய தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்குளம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார் இரவு நேரத்தில் சிறுமி தனலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்ததை உனது தாயிடம் இதனை கூறக்கூடாது என்று தெரிவித்த போது, சிறுமி கூறி விடுவேன் என்று சொன்னதால் தனலட்சுமியை கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளார். இந்த சம்பவத்தில் கொலை  குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் அப்பகுதி சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சிறுமி சதீஷ்குமாருடன் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு சதீஷ்குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. போலீசை கண்டதும் தப்ப முயன்ற போது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டு  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொலை – குற்றவாளி கைது

 

சதீஸ்குமார் தற்போது நிலக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறான்.படிப்பை தொடர முடியாமல் கூலி வேலை செய்து வந்த தனலட்சுமியின் தாய்- தந்தை கருத்து வேறுபாட்டால் பிரிந்து தாய் வேறு ஒரு திருமணம் செய்து தற்பொழுது பிரசவத்திற்காக மருத்துவமனையில் வந்ததும்  குறிப்பிடத்தக்கது

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img