spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? – அன்புமணி அரசுக்கு கேள்வி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் மேற்கத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குத்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல் காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த 265 ஆம் தேதி அதிகாலையில் இரு கே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று நிரண்டு ம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை. வருவாய்த்துறை.வனத்துறை, கனிம வனத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல் துறையினர் மட்டும் நான் விரைந்து வந்து கடத்தல் ஈரக்குத்துக்கனை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக்கூடமார்க்கவில்லை. அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவனக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19&ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிய வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிஆய்வு நடத்தினர்.அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓலித்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதன பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், காடத்திர் செல்லவும் நடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கமளைக்கொள்ளை நடத்த நடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் மக்கொள்ளை தொடர்கிறது.

அடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக நிகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கணிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்க முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது நான். கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஓட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் நணிமனைக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை. மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும். கேரணத்திற்கும் நினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், நடத்தப்படுகின்றன. கணிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுத்த ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும். அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை. திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
"தீய சக்தியின் தயவோடு தூய சக்தியின் ஆட்சி" - ஜூலி வெளியிட்ட வீடியோ
01:25
Video thumbnail
முதல்வராகும் விஜய்.. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு..
01:49
Video thumbnail
தவெகவுக்கு விசிக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு
01:10
Video thumbnail
முதல்வராகும் விஜய் | தவெகவுக்கு விசிக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு | TVK | VCK | CPI | CPM | CM Vijay
10:50
Video thumbnail
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? | விஜய் முதல்வராகிறார் | TVK | Vijay | DMK MK Stalin | ADMK EPS
17:02
Video thumbnail
விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது
01:28
Video thumbnail
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்?
01:49
Video thumbnail
ஆட்சி அமைக்க விஜயை ஆளுநர் அழைக்க வேண்டும் - நடிகர் தம்பி ராமையா வீடியோ வெளியீடு
02:53
Video thumbnail
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்? | நெருக்கடி கொடுக்கும் பாஜக | TVK | Vijay | Governor | BJP
14:57
Video thumbnail
மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
02:20
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img