spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வாய்ப்பு; அக்டோபர்-29 முதல் நவம்பர் -18 வரை நடைபெறுகிறது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வாய்ப்பு; அக்டோபர்-29 முதல் நவம்பர் -18 வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது அதன்படி, வரும் ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வரும் அக்.29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்பிறகு அக்.29ம் தேதி முதல் நவ.28ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு. விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்.29 முதல் நவ 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் கொடுக்கலாம். மேலும், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதன்படி, நவம்பர் 9,10,23,24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

 

Video thumbnail
சென்னை புறநகர் பகுதியில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்..
00:34
Video thumbnail
திராவிட மாடல் 2.0வில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
5,000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் - மகளிருக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர்
02:14
Video thumbnail
நாயகியாக என்னோட முதல் படமான மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகுது -வீடியோ வெளியிட்டு நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி
01:44
Video thumbnail
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா?, டெல்லி அணியா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் | MK Stalin | DMK
01:37
Video thumbnail
பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன் தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது - MK Stalin
01:23
Video thumbnail
இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறக்கப்பட்டுள்ளது
00:35
Video thumbnail
திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டு மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை!
00:58
Video thumbnail
பிரபல நடிகை ஸ்ரீலீலா எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்
00:29
Video thumbnail
ஆட்சியில் பங்கு? தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! கூட்டணியில் சதி? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img