spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி – எஸ்.பி.பி சரண்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனது இனிமையான குரலால் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி - எஸ்.பி.பி சரண்எத்தனை மொழியாக இருந்தாலும் சரி அத்தனை மொழியிலும் எந்த ஒரு பிழையும் இன்றி பாடல்களை பாடி அசத்தும் அசாத்திய திறமை உடையவர் எஸ்.பி.பி. இவர் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளை அள்ளியவர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பிபி அதிலிருந்து மீண்டு வந்த பின்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதற்கிடையில் எஸ்.பி.பி சரண், எஸ். பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்யக்கோரி முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி - எஸ்.பி.பி சரண்எஸ்.பி.பி சரவணன் அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 25) எஸ்.பி.பி-யின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என்ற பெயர் சூட்டப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “அப்பாவின் இந்த நினைவு நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் சென்று மனு கொடுத்திருந்தேன். காம்தார் நகரில் அப்பா வாழ்ந்த தெருவிற்கு அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.முதல்வர் மிக முக்கியமான வேலையில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. ஆனால் 36 மணி நேரத்திற்குள் அப்பாவின் நினைவு நாளன்றே அவர் வாழ்ந்து வந்த சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி - எஸ்.பி.பி சரண்இந்த தருணத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாமிநாதன் என ஒட்டு மொத்த அரசாங்கத்திற்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
Video thumbnail
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
00:36
Video thumbnail
தயவுசெய்து உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள்..- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
02:17
Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
Video thumbnail
"இயக்கத்திற்கு 50 லட்சம் மக்கள் எப்போது வருகிறார்களோ அன்று நாம் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்..
02:14
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர்..
01:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img