spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

இந்தியாவில் தேர்தல் செய்திகளை சேகரிக்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலியா செய்தி ஒளிபரப்பு கழகத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி டயஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணியாற்றி வருகிறார்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவனி டயஸ் சமீபத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சையானது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இந்த செய்தி எல்லை மீறிய செயல் என்று கூறி அவனி டயஸின் விசாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவனி டயஸ் தான் இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்கவும் தமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவனி டயஸ் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் மோடி அழைக்கும் மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அரசின் தலையிட்டால் மேலும் இரண்டு மாதம் வீசா நீட்டிக்கப்பட்டாலும் தமது விமான புறப்பட்ட பிறகே இந்திய அரசு வீசா நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக அவனி டயஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை மேற்குலக மீடியாக்கள் வெளியிடுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/ipl-ticket-sale-arrest/1814

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த தேர்தலில் மேற்குலக மீடியாக்கள் தங்களையும் ஒரு அரசியல் போட்டியாளர் போல கருதிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாக கூறி சாடினார். தேர்தல் நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
Video thumbnail
அன்று-இன்று காளியம்மாள் பேச்சு #ADMK #NTK #Kaliyammal #EPS #EdappadiPalaniswami
00:51
Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img