கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

கென்யா தலைநகர் நைரோபியை புரட்டி போட்டுள்ள வெள்ளத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.

கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. இதன் எதிரொளியாக கென்யாவிலும் கடந்த மார்ச் மாத பிற்பகுதியிலிருந்து கனமழை பெய்து வருகின்றது. கடந்த வாரத்தில் கனமழை அதிதீவிரமாகி நைரோபி உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தலைநகர் நைரோபியில் பாயும் நைரோபி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தன. இதில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் இறந்துவிட்டனர்.

கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு
சாலைகள் தெரியாத அளவுக்கு காணும் இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
11,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

ஒரு மாதமாக தொடரும் கனமழை இயற்கை பேரிடர் ஆக மாறி உள்ளது. மச்சகோஸ் கவுண்டியில் உள்ள அத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தது. அங்கு சிக்கிக் கொண்டு தவித்த 300 பேரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு உள்ளனர்.

https://www.mugavari.in/news/india-news/teslas-plan-to-set-up-plant-in-india-stalled/1905

ஒரு மாதமாக தொடரும் கனமழையில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்து விட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img