spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு  துறையினர் மீட்டனர்.சீனாவில் பெற்றோர்கள் பிரச்சனையில் குழந்தைகள் அந்தரத்தில் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை வெளிப்புற ஏசி யூனிட்டில் உட்கார வைத்து விட்டு அவரது கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தின் லுயோயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அக்டோபர் 10ம் தேதி குழந்தைகளின் அழுகை சத்தம் பக்கத்து வீட்டுகார்களுக்கு கேட்டு உள்ளது.
ஒரு பெண் குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியிலிருந்த வெளிப்புற ஏசி யூனிட்டில் தனது 2 குழந்தைகளை (ஆண் 1, பெண் 1) அமர வைத்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்துள்ளனர். அதனை அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், குழந்தைகளின் தாய் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, கணவன் குழந்தைகளை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். மேலும் கணவன் – மனைவி இடையே சண்டைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என அருகில் வசிக்கும் வீட்டுகாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் தீயணைக்கும் வாகனம் வந்து குழந்தைகளை மீட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
Video thumbnail
புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் முதல்வர் விஜய் பயணம்
00:48
Video thumbnail
"2 நாளில் முக்கிய முடிவு.." வைகோ பரபரப்பு பேச்சு
02:27
Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img