spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மலேசியாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த 2 நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை கொண்டனர். அப்போது பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்த சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

இதனால், அவர்கள் வைத்திருந்த கூடைகளை பிரித்து சோதனையிட்டபோது, உள்ளே சிவப்பு காதுகளை கொண்ட நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. இதை அடுத்து இருவரையும் கைதுசெய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள, பறிமுதல் செய்யப்பட்ட சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் உரிய ஆவணமின்றி சென்னைக்கு கடத்திவந்தது தெரியவந்தது.

 

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்த சிவப்புக்காது நட்சத்திர ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளி நாட்டு நோய்கள், இங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை இன்று அதிகாலை விமானம் மூலம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். மேலும் ஆமைகளை கடத்திய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img